Friday 30 March, 2012

முகவரி அடையாள அட்டை(Identity Card-02)

"முகவரி அடையாள அட்டை' திட்டத்தை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்போர்ட், புதிய காஸ் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் போன்றவற்றிற்கு முகவரிக்கான அத்தாட்சி கேட்கப்படுகிறது. இதற்காக ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. 



இதுபோன்றதேவைகளுக்கு பயன்படுத்த "முகவரி அடையாள அட்டை'திட்டத்தை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது. மாவட்ட தபால் நிலையத்தில் இதற்கான விண்ணப்பம் ரூ.10க்கு தரப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ. 240 கட்டணம் செலுத்த வேண்டும். 

முகவரி குறித்து அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். பின்மத்திய அரசு, தபால்துறை முத்திரையுடன் லேமினேசன் செய்யப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லும். 

திண்டுக்கல் தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்,

"அரசின் பல்வேறு திட்டங்களின் பயன்களை பெற முகவரிக்கான அத்தாட்சி தருவதற்கு பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். தபால் துறையின் முகவரி அடையாள அட்டை இச்சிரமத்தை போக்கும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் இந்த அட்டை வழங்கப்படும்,'' என்றார்.

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: